புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அதிபர் முர்முவுக்கு பதிலாக பிரதமர் மோடியை வைத்து திறந்து வைக்க முடிவு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

#India #Prime Minister #Parliament #Rahul_Gandhi
Mani
10 months ago
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அதிபர் முர்முவுக்கு பதிலாக பிரதமர் மோடியை வைத்து திறந்து வைக்க முடிவு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அதிபர் முர்முவுக்கு பதிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தது தொடர்பான சர்ச்சை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதியைக் கொண்டு திறக்கவும் இல்லை. விழாவுக்கு அவரை அழைக்கவும் இல்லை. இது நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு அவமதிப்பு ஆகும். நாடாளுமன்றம் அகந்தையால் ('ஈகோ') கட்டப்பட்டது அல்ல. அது, அரசியல் சாசனத்தின் மதிப்பினால் கட்டப்பட்டது ஆகும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு