பதக்கங்களை கங்கையில் வீச போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு!

#India #sports #Tamilnews #Breakingnews #harassed
Mani
10 months ago
பதக்கங்களை கங்கையில் வீச போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்தனர்.

இதனை போலீசார் தடுத்து நிறுத்திய போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இனிமேல் மல்யுத்த வீரர்களுக்கு ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாது என டெல்லி போலீசார் நேற்று தெரிவித்தனர்.

இந்நிலையில், போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக, மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். ஹரித்வாருக்கு பேரணியாக சென்று மாலை 6 மணிக்கு நதியில் பதக்கங்களை வீசுவோம் எனக்கூறியுள்ளனர்.