பிரிகோஜின் பெலாரஸில் இல்லை - அலெக்சாண்டர் லுகாஷென்கோ தகவல்!

#world_news #Lanka4
Thamilini
3 years ago
பிரிகோஜின்  பெலாரஸில் இல்லை - அலெக்சாண்டர் லுகாஷென்கோ தகவல்!

வாக்னர் தலைவர் பிரிகோஜின்  மற்றும், அவர்களுடைய கூலிபடையின் குழு பெலாரஸில் இல்லை என  அந்நாட்டின் தலைவர் அலெக்சாண்டர்  லுகாஷென்கோ கூறியுள்ளார். 

ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட  கிளிர்ச்சி 24 மணி நேரத்தில் நிறைவுக்கு வந்த நிலையில், வாக்னர் கூலிப்படையின் தலைவர் பிரிகோஜின் பெலாரஸில் இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்த கருத்து வெளியிட்டுள்ள பெலாரஸ் தலைவர் லுகாஷென்கோ மேற்படி தெரிவித்துள்ளார். 

அவர்களின் கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான கிரெம்ளின் ஒப்பந்தத்தில் சந்தேகம் உள்ளது எனத் தெரிவித்த லுகாஷென்கோ, பிரிகோஜினைப் பொறுத்தவரை, அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கிறார். பெலாரஸில் இல்லை" எனவும் கூறினார். 

பிரிகோஜின் ஒரு சுதந்திரமான மனிதர் என்பதை "நிச்சயமாக" அறிந்திருப்பதாகவும்,  நேற்று நான் அவருடன் தொலைபேசியில் பேசினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4