ஆளில்லா விமான தாக்குதல்கள் : மேற்கத்தேய நாடுகள் மீது குற்றஞ்சாட்டும் ரஷ்யா!

#world_news #Russia #Lanka4
Thamilini
3 years ago
ஆளில்லா விமான தாக்குதல்கள் : மேற்கத்தேய நாடுகள் மீது குற்றஞ்சாட்டும் ரஷ்யா!

அமெரிக்கா மற்றும் மேற்கத்தேய நாடுகளின் உதவியின்றி உக்ரைனால் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்த முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது. 

மொஸ்கோவுக்கு அருகில் நேற்று (ஜுலை 05) ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ரஷ்யா மேற்படி குற்றஞ்சாட்டியுள்ளது. 

மேற்குலக நாடுகள், ஆளில்லா விமான தாக்குதல்களுக்கு பயிற்சி அளித்து, அத்தகைய குற்றங்களைச் செய்வதற்கு தேவையான புலனாய்வு ஒத்துழைப்பை வழற்குவதாக, ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  

இதேவேளை, கார்கிவ்வின் கிழக்குப் பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில், 12 சிறுவர்கள் உட்பட, 43 பேர் காயமடைந்துள்ளதாக, உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4