ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் மிகப்பெரிய ஊடுருவல் முறியடிப்பு: இந்திய ராணுவம்

#2023 #Tamilnews #Breakingnews #IndianArmy #ImportantNews
Mani
1 year ago
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் மிகப்பெரிய ஊடுருவல் முறியடிப்பு: இந்திய ராணுவம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இருப்பினும், இந்திய வீரர்கள், ஜம்மு காஷ்மீர் போலீசாருடன் இணைந்து, ஊடுருவலை திறம்பட தடுத்தனர்.

இந்த நிலையில் பூஞ்ச் செக்டார் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாட்டம் இருப்பதாக வந்த ரகசிய தகவலின்படி, இந்திய ராணுவம் ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இரண்டு சிறிய ஊடுருவல்களைத் தடுக்க முடிந்ததாகவும், ஒரு குறிப்பிடத்தக்க ஊடுருவலை வெற்றிகரமாக நிறுத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 3 ஊழியர்களை ஜம்மு காஷ்மீர் அரசு வேலையில் இருந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.