அமர்நாத் யாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

#India #Death #Flood #HeavyRain #Tamilnews #Died #Case
Mani
1 year ago
அமர்நாத் யாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஜூலை 1 ஆம் தேதி யாத்திரை தொடங்கியதில் இருந்து, இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.

இந்தநிலையில் சுமார் 3,800 மீட்டர் உயர பனிமலையில் பக்தர்கள் ஏறியபோது 2 பேர் மயங்கி விழுந்து இறந்தனர். இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த போலீஸ்காரர் ஒருவர் மாரடைப்பு வந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில் உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.