சுவிஸ் நாட்டில் நீர் ஏரிகளின் வறட்சி! மக்களை எச்சரிக்கும் அரசு (பிரத்தியேக செய்தி)

#சுவிட்சர்லாந்து
சுவிஸ் நாட்டில் நீர் ஏரிகளின் வறட்சி! மக்களை எச்சரிக்கும் அரசு  (பிரத்தியேக செய்தி)

 உலகில் சகல வளங்களையும் கொண்ட நாடாக சுவிஸ் நாடு திகழ்கிறது. பொருளாதாரத்திலும் இந்நாடு மிக உச்சத்தில் உள்ளது. இருந்தும் சுவிஸ் நாடுகூட நீர் ஊற்று விடயத்தில் மிகவும் ஒரு வறுமையைக் கண்டு வருகிறது.

 சில நாட்களுக்கு முன்னர் எடுத்த கணக்கெடுப்பில் கன்டோன் யூரா எனப்படும் மா நிலத்தில் ஏரிகளில் ஏறக்குறைய நாளுக்கு 18 cm நீர் வற்றிக்கொண்டு செல்வதாகவும், இது நாடு முழுக்க கூட குறைய  இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

 நீர் என்பது மனித வாழ்வுக்கு மிக அவசியமானது. இதுவே தொடருமாக இருந்தால் மக்கள் மட்டுமல்ல அனைத்து வகையான உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கும் என கூறப்படுகிறது.

 இதனை தடுக்க சுவிஸ் அரசு காடுகளை அழிக்கும் செயலை குறைத்துள்ளது. மேலும் வ்றட்சியை தடுக்க மலைகளையும் காடுகளையும் பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 “ஆம் வரும் முன்னர் காப்போம்”