மணிப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராணுவ அதிகாரி!

#India #Women #Sexual Abuse #Harassment #harassed #officer
Mani
2 years ago
மணிப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராணுவ அதிகாரி!

மணிப்பூரில் பெரும்பான்மை இன மக்கள் மற்றும் பழங்குடியினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. கலவரத்தை அடக்க துணை ராணுவப் படைகள் அனுப்பப்பட்டன. இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இளம் பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த மூத்த அதிகாரி சதீஷ் பிரசாத் என்பவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படை நிர்வாகம் அவர் மீது சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4