சென்னை, பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

#India #Bus #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
சென்னை, பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

உலகப் புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. பௌர்ணமி நாட்களில், இக்கோயிலின் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி அமைந்துள்ள கிரிவலத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

ஆடி மாத பௌர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.25 மணிக்கு தொடங்கி 2ஆம் தேதி (புதன்கிழமை) அதிகாலை 1.05 மணிக்கு நிறைவடைகிறது.

பௌர்ணமி நாளில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் அருகிலுள்ள மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். அவர்களின் வசதிக்காக, விழுப்புரம் போக்குவரத்துக் கழகங்கள் சென்னை, பெங்களூரு, சேலம் வழியாக நாளை மற்றும் நாளை மறுநாள் 200 சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றன.

மேலும் பக்தர்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த தகவலை போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4