குடும்ப தகராறில் மனைவியின் கை விரலை கடித்து தின்ற கணவன்

#India #Arrest #Women #husband #Bengaluru
Prasu
1 year ago
குடும்ப தகராறில் மனைவியின் கை விரலை கடித்து தின்ற கணவன்

இந்தியாவில் குடும்ப தகராறில் மனைவியின் கை விரலை கணவர் கடித்து தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் 45 வயதான விஜயகுமார்.

இவர் மனைவி 40 வயதான புஷ்பா. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் மனம் உடைந்த புஷ்பா, விஜயகுமாரை விட்டு பிரிந்து, 2 மகன்களுடன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மனைவியின் வீட்டிற்கு சென்ற விஜயகுமார், அவருடன் தகராறு செய்தார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென்று ஆத்திரமடைந்த விஜயகுமார், மனைவியின் இடது கை விரலை வாயால் கடித்துள்ளார். பின்னர் அவரது விரலை வாயில் போட்டு மென்று தின்றுவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து வலியால் துடித்த புஷ்பாவை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

 இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.