சீனாவின் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்த பிலிப்பைன்ஸ் படகுகள்!
#China
#world_news
#Lanka4
#Phillipines
Thamilini
2 years ago
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில், பிலிப்பைன்ஸ் படகுகள் அத்துமீறி நுழைந்ததாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
பிலிப்பைன்ஸில் இருந்து இரண்டு பழுதுபார்க்கும் கப்பல்கள் மற்றும் இரண்டு கடலோர காவல்படை கப்பல்கள் இன்று (06.08) சட்டவிரோதமாக சீனாவின் நன்ஷா தீவுகளில் கடல் எல்லைக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங் "சட்டத்தின்படி தேவையான கட்டுப்பாடுகளை செயல்படுத்தி பிலிப்பைன்ஸை நிறுத்தியதாகவும், சீன கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் கன் யூ தெரிவித்துள்ளார்.