மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து இரத்து!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து இரத்து!

தொடரூந்து பாதையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக கண்டியில் இருந்து மாத்தளை வரையிலான ரயில் சேவையை தற்காலிகமாக நிறுத்த வேண்டியுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.  

கண்டிக்கும் கட்டுகஸ்தோட்டைக்கும் இடையிலான புகையிரத பாதையின் பராமரிப்பு பணிகள் காரணமாக குறித்த பகுதியில் புகையிரத சேவையை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே, ஆகஸ்ட் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 21ஆம் திகதி அதிகாலை 04:00 மணி வரை அந்த ரயில் பாதையில் ரயில் இயக்கப்படாது என்று இலங்கை ரயில்வே தலைமையகத்தின் துணைப் பொது மேலாளர் இண்டிபோலகே தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4