பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்

#India #Prime Minister #Delhi #today #Independence #Day #Minister #Tamilnews #IndianArmy #ImportantNews #Special Day
Mani
1 year ago
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்

இந்தியாவின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இதையடுத்து தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் "சுதந்திர தின வாழ்த்துக்கள். நமது மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவதுடன், அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஜெய் ஹிந்த்!" என்று பதிவிட்டுள்ளார்.