கடற்படை சிப்பாய் ஒருவர் நீரில் மூழ்கி பலி!

#SriLanka #Death #Lanka4
Thamilini
2 years ago
கடற்படை சிப்பாய் ஒருவர் நீரில் மூழ்கி பலி!

பயிற்சி பணியின் போது கடலில் மூழ்கி கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னம்கொட பிரதேச கடற்கரையில் நேற்று (15.08) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பயிற்சிக் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்களில் ஒருவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும்  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டுவன, தொடந்துவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4