சக நண்பர்களுக்கு தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்த மாணவி தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #Poison #students
Prathees
2 years ago
சக நண்பர்களுக்கு தண்ணீரில் விஷம் கலந்து  கொடுத்த மாணவி தொடர்பில் வெளியான தகவல்!

நாரம்மல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் தனது நண்பர்களுடன் ஏற்பட்ட பகை காரணமாக தனது நண்பர்களின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்து கொடுத்து தானும் குடித்துள்ளார்.

 அவற்றை அருந்திய 5 மாணவிகளும், விஷம் கலந்ததாக கூறப்படும் மாணவியும் அவற்றை குடித்துவிட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.

 மாணவியின் நடத்தைகள் பள்ளியின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இப்பாடசாலையில் நேற்று (14ஆம் திகதி) காலை கூட்டத்தின் பின்னர், 13ஆம் தரத்தில் கல்வி கற்கும் 6 மாணவர்கள் திடீரென சுகவீனமடைந்ததையடுத்து, அந்த மாணவர்களை நாரம்மல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்க பாடசாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 மாணவிகள் குடித்த தண்ணீர் பாட்டில்களில் விஷம் கலந்திருப்பது மருத்துவமனையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிசார், அந்த பாடசாலையின் மாணவி ஒருவரின் வகுப்பில் இருந்து ஒதுக்கப்பட்டதன் காரணமாகவே அவர் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்து கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகள் சிகிச்சை பெற்று நேற்று (15ம் திகதி) மதியம் வெளியேறினர் விஷம் கலந்த மாணவி மற்றும் விஷம் கலந்த தண்ணீரை குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4