கொழும்பில் ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

#SriLanka #drugs
Prathees
2 years ago
கொழும்பில் ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனசல பிரதேசத்தில் வடமேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  நேற்று (15) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் 1 கிலோ 6 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 களனி, திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

 சந்தேகநபர் இன்று (16) அளுத்கடை நீதவான் நீதிமன்ற இலக்கம் 5 முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

 மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4