இன்று மாலை ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

#Temple #Tamil People #people #கோவில் #2023 #Tamilnews #Kerala #ImportantNews
Mani
2 years ago
இன்று மாலை ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். இந்த நேரத்தில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். எனவே ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (16ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை துவக்கி வைத்தார். இன்று வேறு விழாக்கள் எதுவும் நடைபெறாது. இருப்பினும், நாளை முதல், கணபதி ஹோமம், உஷபூஜை, புஷ்பாபிஷேகம் போன்ற வழக்கமான சடங்குகள், 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை தினமும் நடக்கிறது.

அது மட்டுமின்றி படி பூஜை, உதயாஸ்தமய பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. மேலும் இந்த 5 நாட்களும் நெய் அபிஷேகமும் நடைபெறும். கோவில் நடை திறந்திருக்கும் 5 நாட்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்களும் நிறுவப்படுகின்றன. மாதாந்திர பூஜை முடிவடைந்து வருகிற 21-ம் தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4