பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை!

#SriLanka #Sri Lanka President #Death
Mayoorikka
2 years ago
பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை!

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் சிறுவன் ஒருவர் சர்ப்பம் தீண்டி உயிர்ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒரு வயதும் 7 மாதம் நிரம்பிய தனுஜன் ஜெஸ்மின் எனும் பாலகனே உயிரிழந்துள்ளார்.

 சர்ப்பம் தீண்டியவுடன், சிறுவன் தருமபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

 கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறுவனை கடித்த பாம்பினை கொண்டு வருமாறு கூறியதை அடுத்து, உறவினர்கள் பாம்பினை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

 அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பொறல்ல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4