பிரான்ஸ் நாட்டின் 19 மாவட்டங்களில் கடும் வெப்பநிலை உணரப்படும்

#France #today #District #Lanka4 #heat #இன்று #வெப்பமயமாதல் #லங்கா4 #பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டின் 19 மாவட்டங்களில் கடும் வெப்பநிலை உணரப்படும்

இன்று ஓகஸ்ட் 18, வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் பலத்த வெப்பம் நிலவும். 

19 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று 40°C வரை வெப்பம் நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை மாலை ஏழு மாவட்டங்களுக்கு (Loire, Haute-Loire, Rhône, Ain, Isère, Haute-Savoie மற்றும் Savoie) எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த எச்சரிக்கை மேலும் பன்னிரெண்டு மாவட்டங்களுக்கு ( Allier, Cantal, Puy- de-Dôme, Doubs, Jura, Saône-et-Loire, Corrèze, Gers, Lot, Lot-et-Garonne, Tarn மற்றும் Tarn-et-Garonne) அதிகரிக்கப்பட்டுள்ளது.

 அதிக வெப்பம் மற்றும் அனல் காற்று காரணமாக வயோதிகர்கள் அவதானமாக இருக்கும் படியும், அதிகளவு தண்ணீரை பருகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.