ஓய்வு பெற்ற விசேட வைத்திய நிபுணர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த தீர்மானம்

#SriLanka #Hospital #doctor #work #Retire
Prasu
2 years ago
ஓய்வு பெற்ற விசேட வைத்திய நிபுணர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த தீர்மானம்

சுகாதாரத் துறையின் தேவைகளை கருத்தில் கொண்டு ஓய்வு பெற்ற விசேட வைத்திய நிபுணர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதாரத் துறையில் கிட்டத்தட்ட ஐந்நூறு விசேட வைத்தியர்களின் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அந்த வெற்றிடங்களுக்காக இவர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜசூரிய தெரிவித்தார்.

 கொழும்பிற்கு வெளியே உள்ள தூரப் பிரதேசங்களில் விசேட வைத்தியர்களுக்கான வெற்றிடங்கள் அதிகம் காணப்படுவதாகவும் ஓய்வுபெற்ற விசேட வைத்திய நிபுணர்கள் பணிக்கு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு சகல வசதிகளையும் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4