மெல்போர்னில் சிறுவர் துஷ்பிரயோகம்: 13 குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான இலங்கை பிக்கு

#SriLanka #Australia #Monk
Prathees
2 years ago
மெல்போர்னில் சிறுவர் துஷ்பிரயோகம்: 13 குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான இலங்கை பிக்கு

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் அமைந்துள்ள தம்ம சரண ஸ்ரீலங்கா பௌத்த விகாரையின் விகாரை விஜித நாவுதுன்னே தேரர் இன்று புதன்கிழமை நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 68 வயதான அவர் 1996 மற்றும் 2004 க்கு இடையில் ஸ்பிரிங்வேல் மற்றும் கீஸ்பரோவில் உள்ள கோயில்களில் தங்கியிருந்தபோது சந்தித்த மூன்று குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

 16 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தல், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முன் அநாகரீகமாக நடந்து கொண்டமை உள்ளிட்ட 13 குற்றங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 1993 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு வந்து ஸ்பிரிங்வேல் கோவிலில் வதிவிட துறவியாக பணிபுரிந்து 2001 ஆம் ஆண்டு கீஸ்பரோ கோவிலுக்கு குடிபெயர்ந்ததாக தம்ம சரண இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

 300 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொள்ளும் "மிகவும் வெற்றிகரமான ஞாயிறு பாடசாலையை" நடாத்திய விஜித நாவுதுன்னே தேரர் மேற்படி ஞாயிறு பாடசாலை மாணவர்களிடம் இந்த துஷ்பிரயோகங்களை செய்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

 "குழந்தைகளுடன் அவர் கொண்டிருந்த நட்பு" சிறப்பு வாய்ந்தது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த தேரர் இலங்கையின் பிரதான பௌத்த பிரிவான ராமன்ய பிரிவின் அவுஸ்திரேலியாவின் பிரதான சங்கநாயகப் பட்டத்தை வைத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 புதன்கிழமை விசாரணையின் போது பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் போது தம்மை அங்கியால் மூடிக்கொண்ட தேரர் நவம்பர் 10 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வரவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4