சந்திராயன்-3: நிலவின் புதிய படங்கள் வெளியீடு!

#India #Moon #Tamilnews #Breakingnews #ImportantNews #Scientist #Rocket #Space
Mani
1 year ago
சந்திராயன்-3: நிலவின் புதிய படங்கள் வெளியீடு!

சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14ஆம் தேதி இஸ்ரோவால் ஏவப்பட்டது, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிலவை சுற்றி வரும் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ம் தேதி நடந்தது. வெற்றிகரமாகப் பிரிந்ததைத் தொடர்ந்து, விக்ரம் லேண்டர் சந்திரனின் ஆரம்பப் படங்களைப் பகிர்ந்துள்ளது. பின்னர் கடந்த 18-ந்தேதி விண்கலத்தில் இருந்த பிரிந்த பிறகு லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டது.

பின்னர், நேற்று அதிகாலை 2 மணியளவில் இரண்டாவது முறையாக லேண்டரின் சுற்றுப்பாதை மேலும் குறைந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.