இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி!

#SriLanka #Crime #Lanka4
Thamilini
2 years ago
இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி!

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டில் 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இவர் இரத்மலானை கோவில் வீடமைப்பு பகுதியில் வசிப்பவர் எனத்  தெரியவந்துள்ளது. 

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்தில் அமைந்துள்ள கோழிக்கடையில் பணிபுரியும் போதே உயிரிழந்த நபர் சுடப்பட்டுள்ளார். சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4