பிரான்ஸில் கைதி ஒருவர் துாக்கிட்டு தற்கொலை

#France #Suicide #Prison #Lanka4 #லங்கா4 #பிரான்ஸ்
பிரான்ஸில் கைதி ஒருவர் துாக்கிட்டு தற்கொலை

 நேற்று திங்கட்கிழமை காலை Fresnes (Val-de-Marne) சிறைச்சாலையில் கைதி ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று காலை குறித்த கைதி தனது அறையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை சிறைச்சாலை அதிகாரி பார்த்துள்ளார்.

 அதன் பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது அறையில் தனியாக வசித்த நிலையிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் மேலும் இந்த தற்கொலை தொடர்பாக உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.