கடமையை செய்யவிடாமல் தடுக்கும் அமைச்சர்: இராஜாங்க அமைச்சர் குற்றச்சாட்டு

#SriLanka #Minister
Mayoorikka
2 years ago
கடமையை செய்யவிடாமல் தடுக்கும் அமைச்சர்: இராஜாங்க அமைச்சர் குற்றச்சாட்டு

துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தன்னை தன் கடமைகளை செய்ய விடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 அமைச்சின் விவகாரங்களை முன்னெடுக்க இராஜாங்க அமைச்சரின் உதவிகளைப் பெற வேண்டியது அவசியமானதென நேற்றைய தினம் (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் தெரிவித்தார்.

 “திட்டங்களை நடைமுறைப்படுத்த பல முதலீட்டாளர்களை நாங்கள் அழைத்து வந்தபோது பல இடையூறுகளுக்கு நாங்கள் முகங்கொடுக்க நேரிட்டது. அமைச்சின் அதிகாரிகள் அமைச்சரின் கட்டளைகளுக்கமைய மட்டுமே செயற்படுவதும் இராஜாங்க அமைச்சரை அலட்சியப்படுத்துவதையுமே இச்செயல்கள் காட்டுகின்றன.

 அமைச்சிலுள்ள மூத்த ஊழியர் குழுவொன்று தான் இவ்வாறு செயற்படுகின்றது” என அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4