வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்!

#SriLanka #America
Mayoorikka
2 years ago
வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் வடக்கு ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ல்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, புதன்கிழமை (23) இடம்பெற்றது.

 சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் மற்றும் வடக்கு மாகாணத்துக்கான அவரது முன்னுரிமைகள் மற்றும் வடக்கின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு நாம் எவ்வாறு மேலும் ஆதரவளிக்க முடியும் என்பது குறித்து ஆளுனரிடம் கேட்டறிந்ததாக டுவிட்டரில் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.

 பிராந்தியத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளை நேரடியாகப் புரிந்துகொள்வதற்கும், அமெரிக்க உதவி மற்றும் ஒத்துழைப்புக்கான கூடுதல் வாய்ப்புகளை ஆராய்வதற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 பலாலி விமான நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஐயம் ஒன்றை மேற்கொண்ட அவர் பல்வேறு இடங்களிற்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4