பிரபல பைக் ஷோரூம் தீப்பிடித்து பல கோடி மதிப்புள்ள வாகனங்கள் எரிந்து சேதம்

#India #Accident #fire #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
1 year ago
பிரபல பைக் ஷோரூம் தீப்பிடித்து பல கோடி மதிப்புள்ள வாகனங்கள் எரிந்து சேதம்

ஆந்திர மாநிலம் விஜயவாடா கே.பி.நகரில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பைக் ஷோரூம் உள்ளது. விஜயவாடா மற்றும் கிருஷ்ணா மாவட்ட தலைமையகம் என்பதால் இங்கு ஏராளமான பைக்குகள் விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

ஷோரூமில் முதல் தளத்தில் எலக்ட்ரிக் பைக்குகளும், கீழ் தளத்தில் பெட்ரோல் பைக்குகளும் இருந்தன. மேலும், அதே வளாகத்தில் பைக் ஷோரூம் சர்வீஸ் சென்டர் இயங்கி வந்தது. நேற்று இரவு, ஷோரூமில் இருந்த ஊழியர்கள், முதல் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக்கை சார்ஜ் செய்தனர். ஆனால், எலெக்ட்ரிக் பைக்கின் சார்ஜிங்கை நிறுத்த நினைவில்லாமல் அலட்சியமாக சென்றுவிட்டனர்.

அதிக நேரம் சார்ஜ் செய்ததால், இன்று அதிகாலை எலக்ட்ரானிக் பைக் திடீரென வெடித்ததால், தீ மளமளவென அருகில் இருந்த பைக்குகளுக்கும் பரவியது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் அதிர்ச்சியடைந்து, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் முதல் தளத்திலிருந்து கீழ்தளத்திற்கு பரவியது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் பைக்குகளுக்கும் பரவியது. தொடர்ந்து தீயணைப்புத் துறையினர், 3 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க நீண்ட நேரம் போராடினர்.

இருப்பினும் தீ வேகமாக பரவியதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் எரிந்து நாசமானது, விபத்து குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.