அலி சப்ரி ரஹீம் அறநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

#SriLanka #Susil Premajayantha #Lanka4
Kanimoli
2 years ago
அலி சப்ரி ரஹீம் அறநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஒரு தொகை தங்கத்துடன் நாட்டுக்கு வந்து சுங்கப் பிரிவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அறநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

 புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கடந்த மே மாதம் 23ம் திகதி முற்பகல் துபாயிலிருந்து நாடு திரும்பிய போது, தங்க பிஸ்கட்கள் மற்றம் கையடக்க தொலைபேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

 பின்னர் 3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கையடக்க தொலைபேசிகளே இவ்வாறு அரசுடைமையாக்கப்பட்டு 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார் குறித்த தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளின் மொத்த பெறுமதி எட்டரை கோடி ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.

 இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறலின் கீழ் இது குறித்து அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றில் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4