யாழ். கலாச்சார மண்டபத்தில் தொழிற்றுறை, கைத்தொழில்கள் முயற்சிக்கான கண்காட்சி திறந்து வைப்பு

#SriLanka #Jaffna #Lanka4
யாழ். கலாச்சார மண்டபத்தில் தொழிற்றுறை, கைத்தொழில்கள் முயற்சிக்கான கண்காட்சி திறந்து வைப்பு

2023 ஆம் ஆண்டிற்கான வட மாகாண தொழில் கண்காட்சி அங்குரார்பன நிகழ்வு இன்று காலை 10மணியளவில் யாழ் கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

 இலங்கையில் உள்ள 20 தொழிற்சாலைகளில் 300க்கும் மேற்பட்ட அரங்குகளில், புத்தாக்கங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பல புதிய தொழில்கள் மற்றும் வடமாகாணத்திற்கே உரித்தான பல கைத்தொழில்களை Industry 2023 யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சியில் உள்ளடக்கபட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான காசோலையும் வழங்கப்பட்டது. ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் வகையில், கைத்தொழில் அமைச்சும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இவ் கைத்தொழில் கண்காட்சித் தொடரின் வடமாகாண கைத்தொழில் கண்காட்சி '2023 யாழ்ப்பாணப் ' செப்டம்பர் 01 முதல் 03 வரை யாழ்ப்பாண கலாசார நிலையத்தில் நடைபெறவுள்ளது.

 இதன் பொழுது கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தலைமையில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் அமைச்சர், இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4