துப்பாக்கிச்சூடு நடத்திய விசேட அதிரடி படையினர்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
துப்பாக்கிச்சூடு நடத்திய விசேட அதிரடி படையினர்!

உத்தரவை மீறி ஓடிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  

களனிமுல்லை பாலத்தில் விசேட பணியொன்றில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் குழுவினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிள் சந்தேகத்திற்கிடமான முறையில் ஓட்டிச் செல்லப்பட்டதுடன், நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். 

இருப்பினும் குறித்த நபர் அதிரடிபடையினரின் சைகையை மீறி வாகனம் செலுத்திய நிலையில், துப்பாகி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4