உத்தரபிரதேசத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு

#India #Death #Accident #people #HeavyRain #Breakingnews #Died #Mountain
Mani
1 year ago
உத்தரபிரதேசத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. இந்த நிகழ்வால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், உடனடியாக போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர். உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் பற்றி பாராபங்கி எஸ்.பி. தினேஷ் குமார் சிங் கூறும்போது, அதிகாலை 3 மணியளவில் பாராபங்கியில் கட்டிடம் இடிந்து விழுந்தது என எங்களுக்கு தகவல் கிடைத்தது.

பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 12 நபர்களை நாங்கள் காப்பாற்றியுள்ளோம். இடிபாடுகளில் மேலும் 4 பேர் சிக்கியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் தற்போது மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன, தேசிய பேரிடர் மீட்புப் படையின் உடனடி வருகையுடன். மீட்கப்பட்ட 12 பேரும் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தது வருத்தமளிக்கிறது.