பண்டாரகம ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு

#SriLanka #Death #Protest #environment
Prathees
2 years ago
பண்டாரகம ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு

பண்டாரகம ஹோட்டல் ஒன்றின் கழிவுநீரை பொல்கொட ஆற்றில் விடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​அவ்விடத்தைக் காட்டச் சென்ற நபர் ஒருவர் திடீர் சுகவீனமடைந்து துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். 

 பண்டாரகம, பொல்கொட பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். 

 மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்று ஹோட்டலுக்கு வந்தபோது, ​​மற்ற கிராமவாசிகள் குழுவுடன் அங்கு வந்த உயிரிழந்த நபர், பொல்கொட ஆற்றில் இறந்த கழிவுகளை விடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். 

 அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4