கொடூரமான கொள்ளையில் நந்தலால்: நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டும்! வசந்த சமரசிங்க

#SriLanka #Sri Lanka President #Central Bank #Ranil wickremesinghe #Tamilnews #sri lanka tamil news #money
Mayoorikka
2 years ago
கொடூரமான கொள்ளையில் நந்தலால்:  நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டும்! வசந்த சமரசிங்க

கடன் மறுசீரமைப்பு என்ற போர்வையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை கொள்ளையடிக்கும் திட்டம் இருப்பதாக நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

 நலன்புரி அரசை சூறையாடப் போகும் ரணில்- நந்தலால் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் அணிதிரள்வதாக அதன் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க குறிப்பிடுகின்றார்.

 அனைத்து தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள கிட்டத்தட்ட இருபத்தைந்து லட்சம் தொழிலாளர்கள் ஒன்றிணைவார்கள் என்றும் அவர் கூறினார்.

 வருங்கால வைப்பு நிதியை கொள்ளையடித்த நந்தலால் மற்றும் நிதிச் சபை பொது நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

 மேலும், இவை கொடூரமான குற்றங்கள் என்றும், நீதிமன்றங்களில் குற்றம்சாட்டப்படும் என்றும் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4