4 ராணுவ அதிகாரிகளை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகள் சுற்றிவளைப்பு

#India #Death #2023 #Tamilnews #Breakingnews #IndianArmy #ImportantNews
Mani
1 year ago
4 ராணுவ அதிகாரிகளை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகள் சுற்றிவளைப்பு

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

அதையடுத்து, அதிகமான ராணுவ வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, பயங்கரவாதிகளை பிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த தேடுதல் வேட்டை நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது.

இந்த நிலையில் ராணுவ அதிகாரிகளை கொன்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர். இது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.