காவிரி மேலாண்மை கூட்டம் வரும் 18ம் தேதி அவசரமாக நடைபெற உள்ளது

#India #Tamil Nadu #Tamilnews #Breakingnews #ImportantNews #River #Karnataka
Mani
1 year ago
காவிரி மேலாண்மை கூட்டம் வரும் 18ம் தேதி அவசரமாக நடைபெற உள்ளது

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், காவிரி பிரச்சினை மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.