பெரு நாட்டில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து விபத்தில் 24 பேர் பலி

#India #Death #2023 #Tamilnews #Breakingnews #Died #ImportantNews
Mani
1 year ago
பெரு நாட்டில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து விபத்தில் 24 பேர் பலி

பெரு நாட்டில் அயகுச்சோவா பகுதியில் இருந்து ஹூவான்சாயோ என்ற இடத்துக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து விபத்தில் சிக்கி கவிழ்ந்தது.

இதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஏராளமான நபர்கள் காயங்களுக்கு ஆளாகினர், பெரு நாட்டை பொறுத்தவரை தரமற்ற மற்றும் பராமரிப்பு இல்லாத ரோடுகளால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.