மட்டக்களப்பில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தை ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைத்த இராணுவம்

#SriLanka #Batticaloa #Sri Lankan Army #sri lanka tamil news #University
Mayoorikka
2 years ago
மட்டக்களப்பில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தை ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைத்த  இராணுவம்

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட மட்டக்களப்பில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் உத்தியோகபூர்வமாக அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரான முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் இராணுவத்தினர் மட்டக்களப்பு வளாகத்தை உத்தியோகபூர்வமாக நேற்று கையளித்துள்ளனர்.

 இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹிஸ்புல்லா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய பல்கலைக்கழகம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 கடந்த நான்கு வருடங்களாக பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இராணுவம் இருந்ததாகக் கூறிய ஹிஸ்புல்லா, ஈஸ்டர் தாக்குதல்களுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று விசாரணைகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அது திருப்பி கையளிக்கப்பட்டதாக கூறினார்.

 இதேவேளை குறித்த பல்கலைக்கழகத்தை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4