ரணிலுடன் இணைந்து ஆட்சி செய்து உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறோம்: ஷசீந்திர ராஜபக்ஷ
#SriLanka
#government
#Ranil wickremesinghe
Prathees
1 year ago

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்வதாக இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும், பிரதமர் பொதுஜன ஐக்கிய முன்னணியிலிருந்தும், பாராளுமன்றத்தின் பெரும்பான்மையான மக்கள் ஐக்கிய முன்னணியிலிருந்தும் இருப்பதால் இன்றைய அரசாங்கம் பழச்சாறு போன்றது என்றார்.
பொதுஜன பெரமுனவின் கோரிக்கைகளுக்கு இணங்காமல் அரசாங்கத்தை அமைக்க முடியாது எனவும், அரசாங்கத்தின் நல்ல செயற்பாடுகளை ஆதரிப்பதன் மூலம் உலகிற்கு முன்னுதாரணமாக இருப்பேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



