முந்நாள் சுவிஸ் புலிகளின் நிதிப் பொறுப்பாளரால் பல லட்சம் பிராங்குகள் உண்டியல் மோசடி!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
முந்நாள் சுவிஸ் புலிகளின் நிதிப் பொறுப்பாளரால் பல லட்சம் பிராங்குகள் உண்டியல் மோசடி!

சுவிஸ் புலிகளின் நிதிப் பொறுப்பாளராக இருந்த ஒருவரால் உண்டியல் என்ற போர்வையில் பலரிடம் இலட்சக்கணக்கான பிராங்குகள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபரால் சுவிஸின்  சூரிச் மாநிலத்தில்  KIOSK நடத்தும் ஒருவர்   250000 பிராங்குகளை இழந்துள்ளதுடன்,  சட்ட பூர்வ  பண மாற்றம் செய்யும் ஒருவர் 25000 பிராங்குகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் உண்டியல் அனுப்பப்படும் பணம் இலங்கைக்கு அனுப்பப்படுவதும் சிலரால் ஊர்ஜிதமாக கூறப்படுகிறது. குறித்த நபருடன்  பாரீசில் வாழும் ஐக்கிய நாட்டு சபைக்கு தொடர்பான ஊடகவியலாளரும் இயங்குவதாகவும் கூறப்படுகிறது. 

 இவர்  2009 இல் புதிய புலிகளின் சுவிஸ் கிளை தலைமை கணக்கு விபரங்களை கேட்டமைக்கு தலைவர் வரும்பொழுது அவரிடம் கணக்கை ஒப்படைக்கிறேன் என கூறியதாகவும், அக்கூட்டத்துக்கு சென்ற ஒரு தமிழ்  பற்றாளரார் கவலையோடு கூறியுள்ளார். 

ஆகவே புலிகள் தொடர்பாக பல அமைப்புகள், குழுக்கள் இயங்குவதாகவும், சரியான நபர்களிடம் இருந்து தகவல்களை பெறுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4