அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
#India
#Tamil People
#HeavyRain
#2023
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#Cyclone
Mani
11 months ago
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் பின்னர் வரும் 21 ஆம் தேதி மத்திய அரபிக் கடல் பகுதியில் இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக கேரள மாநிலத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் வரும் 20 -ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.