இம்மானுவல் மக்ரோனின் ஆட்சி மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்

மக்ரோனின் அரசாங்கம் மீது எதிர்க்கட்சிகள் நேற்று வெள்ளிக்கிழமை நம்பிக்கை இல்லாத் தீர்மான பிரேரணை கொண்டுவந்திருந்தது. ஆனால் அதனை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினை (budget 2024) 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி சமர்பித்திருந்தார் பிரதமர் Élisabeth Borne.
பாராளுமன்றத்தில் வாக்குகள் இன்றில் நிறைவேற்றம் செய்வதற்கு ஏதுவான குறித்த அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டும் Rassemblement National கட்சியினர் இந்த நம்பிக்கை இல்லா தீர்மான பிரேரணையை கொண்டுவந்திருந்தனர்.
ஆனால், குறித்த நம்பிக்கை இல்லா பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடாமல் சபாநாயகர் நிராகரித்துள்ளார்.
முன்னதாக சென்ற வார தொடர்க்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை 89 வாக்குகளால் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



