வாகன இறக்குமதியில் ஏற்பட்ட முறைகேடு அம்பலம்!

#SriLanka #Import #vehicle
PriyaRam
2 years ago
வாகன இறக்குமதியில் ஏற்பட்ட முறைகேடு அம்பலம்!

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான 119 அனுமதிப்பத்திரங்களை முறைகேடாக பயன்படுத்தி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவற்றில் 75 வாகனங்கள் ஒரு நிறுவனத்தினால் இலங்கைக்கு கடத்தப்பட்டதாக நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அறிவித்துள்ளது.

முறைகேடான முறையில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் கடத்தல்காரர்கள் பெருமளவு பணம் சம்பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

images/content-image/2023/10/1698036855.jpg

மின்சார கார்களை இறக்குமதி செய்ய உரிமம் வழங்குவதை உடனடியாக நிறுத்தவும், கடத்தல்காரர்களால் ஏமாற்றப்பட்ட வரிப் பணத்தை வசூலிக்கவும் நாடாளுமன்றத்தின் வழிவகைகள் குழு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4