பிரான்ஸ் : இரு மூதாட்டிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்

#France #Women #Hospital #Elder #Lanka4 #லங்கா4 #பிரான்ஸ் #மருத்துவமனை #France Tamil News #Tamil News
பிரான்ஸ் : இரு மூதாட்டிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்

மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இரு முதியவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்த நிலையில், அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Argenteuil நகரில் உள்ள l'hôpital Victor-Dupouy மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 93 மற்றும் 95 வயதுடைய இரு மூதாட்டிகள் பத்து நாட்களுக்கு முன்பாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருந்தனர்.

images/content-image/1698161697.jpg

 இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது உயிரிழப்புக்கும் பாலியல் வல்லுறவுக்கும் தொடர்பு உள்ளதா என மருத்துவத்தரப்பு ஆய்வு மேற்கொண்டுள்ளது.

 இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள அந்நகர காவல்துறையினர் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4