பிரான்ஸில் இருந்து குற்றம் புரிந்த வெளிநாட்டவரகள் சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டனர்
#France
#Crime
#Lanka4
#லங்கா4
#பிரான்ஸ்
#foreign
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
10 months ago
பிரான்சில் குற்றச்செயலில் ஈடுபட்ட 17 வெளிநாட்டவர்கள் அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
‘கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஆயுதங்களை பயன்படுத்தி அச்சுறுத்தலில் ஈடுபட்டவர்கள் என மொத்தம் 17 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்!” என உள்துறை அமைச்சர்mGérald Darmanin, ஒக்டோபர் 25, இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
அண்மையில் Arras நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு குற்றச்செயல்கள், அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட பலர் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்களில் உள்ள வெளிநாட்டவர்களும் வெளியேற்றப்பட உள்ளதாக அறிய முடிகிறது.