நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டம் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ள ஆசிரியர்கள்!

#SriLanka #School #Protest #Teacher
PriyaRam
2 years ago
நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டம் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ள ஆசிரியர்கள்!

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், பாடசாலைகளுக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்த தீர்மானித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 1.30க்கு நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த 24ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணி மீது, பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் நடத்தியிருந்தனர்.

images/content-image/2023/10/1698382941.jpg

குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4