பொல்கொட ஆற்றில் சடலம் ஒன்று மீட்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பொல்கொட ஆற்றில் சடலம் ஒன்று மீட்பு!

மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொட ஆற்றில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

நேற்று (27.10) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கிடைத்த செய்தியின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் இறந்தவரை உறுதி செய்ய முடியவில்லை என்றும் கூறியுள்ளனர். 

உயிரிழந்த நபர் சுமார் 5 அடி உயரம், மெல்லிய உடல், குட்டையான முடி, முழங்கைக்கு அருகில் வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

அவர் கருப்பு நிற ஷார்ட்ஸ் மற்றும் பழுப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4