இஸ்ரேலில் பயங்கரவாதம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியின் கூற்று

#ஜனாதிபதி #France #பிரான்ஸ் #Israel #Lanka4 #France Tamil News #President #Tamil News #லங்கா4 #Terrorists #ஜனாதிபதி #பிரான்ஸ் #France Tamil News #Tamil News #Terrorists
Mugunthan Mugunthan
10 months ago
இஸ்ரேலில் பயங்கரவாதம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியின் கூற்று

பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட, இஸ்ரேல் தனியாக இல்லை. பயங்கரவாதம் ஒரு சர்வதேச பிரச்சனை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

 இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மக்ரோன் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார். ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 35 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

images/content-image/1698480424.jpg

 இது உள்நாட்டு மோதலோ, இஸ்ரேலின் தனிப்பட்ட பிரச்சனையோ இல்லை. பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. பயங்கரவாத அமைப்பு அனைத்து நாடுகளாலும் ஒடுக்கப்படும். இஸ்ரேல் தனியாக இல்லை!" என மக்ரோன் மேலும் தெரிவித்தார்.

 இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 3,000 சிறுவர்கள் உள்ளிட்ட 7,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 35 பிரெஞ்சு மக்களும் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.