பிரான்ஸ் மதுபானசாலையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இருவர் பலி. இருவர் காயம்.

#France #Bar #Lanka4 #GunShoot #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
Mugunthan Mugunthan
10 months ago
பிரான்ஸ் மதுபானசாலையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இருவர் பலி. இருவர் காயம்.

நேற்று முன்னாள் சனிக்கிழமை இரவு Gard நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.  மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

 Pont-Saint-Esprit நகர்ப்பகுதியில் உள்ள அருந்தகம் ஒன்றின் முன்பாக இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. ஆயுததாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நல்வர் காயமடைந்தனர். 

images/content-image/1698653009.jpg

அவர்களில் 24 மற்றும் 25 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். காயமடைந்த இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

 நள்ளிரவின் பின்னர் 2 மணி அளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.