போலி ஆவணங்களை தயாரித்து தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தவர்கள் வெளிநாடு செல்லத் தடை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
போலி ஆவணங்களை தயாரித்து தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தவர்கள் வெளிநாடு செல்லத் தடை!

போலி ஆவணங்களை தயாரித்து தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான நிறுவன உரிமையாளரும், அதற்கு ஒப்புதல் அளித்த இரண்டு மூத்த அரச அதிகாரிகளும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பிரேரணையை சமர்ப்பித்ததை அடுத்து, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதன்படி, நிறுவனத்தின் உரிமையாளரான 'அருண தீப்தி' என அழைக்கப்படும் சுகத் ஜானக பெர்னாண்டோ, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் வைத்தியர் விஜித் குணசேகர மற்றும் சுகாதார அமைச்சின் விநியோக பணிப்பாளர் டொக்டர் கபில விக்கிரமநாயக்க ஆகியோர் சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.  

போலியான ஆவணங்களை தயாரித்து 22,500 இம்யூனோகுளோபுலின் ஆன்டிபாடி குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் மருந்து நிறுவனம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன்கீழ் 130 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4