கடவத்தையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மீது தாக்குதல்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கடவத்தையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மீது தாக்குதல்!

ஒரு குழுவினரின் தாக்குதலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கரகஹமுன பகுதியில் நேற்று (31.10) காலை இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் சிறிய லொறி ஒன்றில் வந்த குழுவினர் மேற்படி தாக்குதல் நிகழ்த்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பின்னர், வீட்டில் இருந்த இருவர் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளினால் தாக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கடவத்தை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

காயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

25 மற்றும் 29 வயதுடைய இரண்டு சகோதரர்கள் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4